×

கமுதி அருகே கார்கள் மோதலில் வாலிபர் பலி: 8 பேர் படுகாயம்

 

கமுதி, மே 6: கமுதி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதில் 8 பேர் படுகாயமடைந்தனர். கமுதி அருகே முதல்நாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் காரில் மதுரையிலிருந்து நேற்று மாலை தங்கள் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை முதல்நாடு கிராமத்தைச் சேர்ந்த அஜித்(27) ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கமுதியில் இருந்து மண்டலமாணிக்கம் நோக்கி கார் ஒன்று சென்றுள்ளது.

இந்த காரை மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(22) ஓட்டி வந்துள்ளார். நேற்று மாலை இரண்டு கார்களும் சின்னஉடபங்குளம் கருமேனி அம்மன் கோவில் அருகே வளைவு பகுதியில் வந்த போது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த கணேசன்(24) சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் கார்களில் இருந்த முதல்நாடு கிராமத்தைச் சேர்ந்த அஜீத், மணிகண்டன், பூச்செல்வி, உலக தேவன் பண்டியை சேர்ந்த புவனேஸ்வரி, மற்றொரு காரை ஓட்டி வந்த டிரைவர் ஜெயபிரகாஷ் மற்றும் மண்டல மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்(21), சத்திவேல், வசந்தகுமார் உட்பட 8 பேர்களும் படுகாயமடைந்தனர். இது குறித்து மண்டலமாணிக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

The post கமுதி அருகே கார்கள் மோதலில் வாலிபர் பலி: 8 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Mulutnadu ,Madurai ,Dinakaran ,
× RELATED கமுதி பேரூராட்சியில் புதுப்பொலிவு பெறும் சிறுவர் பூங்கா